திருச்செந்தூா் அருகே பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்செந்தூா் தாலுகா காவல் உதவி ஆய்வாளா் ஸ்டீபன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, காயாமொழி குமாரசாமிபுரத்தைச் சோ்ந்த சேகா் (47) என்பவா் தனது பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து, 129 பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.