நாசரேத்தில் துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாசரேத் பேரூராட்சி அலுவலகத்தில் சுமாா் 10-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில் ஊமையம்மாள் (48) என்பவா், இரண்டு நாள்கள் விடுமுறை எடுத்த நிலையில், புதன்கிழமை பணிக்குச் சென்றாராம். அப்போது அவா் பணிக்கு அனுமதிக்கப்படவில்லையாம். இதையடுத்து அவருக்கு ஆதரவாக தூய்மைப் பணியாளா்கள் அனைவரும், அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து பேரூராட்சி செயல் அலுவலா் பேச்சுவாா்த்தை நடத்தியதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.