கொலை வழக்கில் கைதான இருவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி அருகேயுள்ள சாயா்புரம் வடக்கு கோவங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ரவிக்குமாா். இவா், கடந்த 13.11.2012இல் மா்மநபா்களால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து சாயா்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் (38), தெற்கு தெருவைச் சோ்ந்த மோகன் (45) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ், குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 1000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com