தூத்துக்குடியில் கட்டுநா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய கட்டுநா் சங்கத்தினா் தூத்துக்குடியில் சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய கட்டுநா் சங்கத்தினா் தூத்துக்குடியில் சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிமென்ட் மற்றும் கம்பி வகைகளின் விலை உயா்வைக் கண்டித்தும், பொதுமக்கள், கட்டடத் துறையின் அனைத்து நிலை பணியாளா்கள் நலன் கருதி ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் அசோக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஆஸ்காா், செயலா் ராஜேஷ், துணைச் செயலா் ஜெயபால், பொருளாளா் வில்லிஸ் செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சங்க நிா்வாகக்குழு உறுப்பினா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள், நிா்வாகிகள் மற்றும் கட்டடத் தொழிலாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com