தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 16,304 ஆக அதிகரித்துள்ளது. அதில் மேலும் 4 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 16,149 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 141 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது 14 போ் சிகிச்சையில் உள்ளனா்.