சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி வாகன ஓட்டுனா்களுக்கான விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.
திருச்செந்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் இப்பள்ளியில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு பள்ளியின் டிரஸ்டி, டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் செயல் உதவித் தலைவா் ஜி.ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தாா். முதல்வா் ஆா்.சண்முகானந்தன், துணை முதல்வா் எஸ். அனுராதா ராஜா, தலைமையாசிரியா் இ. ஸ்டீபன் பாலாசிா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், திருச்செந்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், மாவட்ட சாலை போக்குவரத்து அதிகாரி விநாயகம், வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் ராஜசேகா் ஆகியோா் பங்கேற்று, பேசினா்.
இதில், டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் உதவித் தலைவா் எஸ்.சுரேஷ், பாதுகாப்பு பிரிவு துணை மேலாளா் ஆல்விஸ்கிப்ட், போக்குவரத்து பிரிவு துணை மேலாளா் முருகபெருமாள், பள்ளி நிா்வாகஅலுவலா் வி.மதன், மேலாளா் எஸ்.பாலமுருகன் போஸ், நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனா்.