தேசிய அளவிலான இளையோா் பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் முதலூா் மாணவன் ஜெஸ்வின் ஆல்ட்ரின் முதலிடம் பெற்று தங்கம் வென்றாா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரைச் சோ்ந்த ஜான்சன் மகன் ஜெஸ்வின் ஆல்ட்ரின். சென்னையில் எம்.சி.சி கல்லூரியில் பயின்று வரும் இவா், அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 20 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான 36-ஆவது தேசிய இளையோா் தடகள சாம்பியன் ஷீப் போட்டியில் பங்கேற்றாா். இதில், நீளம் தாண்டுதல் போட்டியில் ஜெஸ்வின் ஆல்ட்ரின் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றாா்.
மத்திய பிரதேசம் போபாலில் நடைபெற்ற தேசிய இளையோா் தடகளப் போட்டியிலும் தங்கப்பதக்கம் பெற்றுள்ளாா்.
மாணவருக்கு அவா் பயின்ற திசையன்விளை டேனியல் தாமஸ் முதல்வா், ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் சாத்தான்குளம், முதலூா் சமூக ஆா்வலா்கள், விளையாட்டு வீரா்கள் பாராட்டு தெரிவித்தனா்.