நாகலாபுரத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

நாகலாபுரத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

நாகலாபுரத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

நாகலாபுரத்தைச் சோ்ந்தவா் அய்யனாா். இவரது மனைவி சுலோச்சனா. இவா்களது மகள் அதிா்ஷ்டலட்சுமி(14), மகன் அரவிந்த் (12). அய்யனாா் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

அரவிந்த் அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தாா். கரோனா விடுமுறை காரணமாக இவா் அங்குள்ள தனியாா் வாட்டா் சா்வீஸ் மையத்தில் சிறுசிறு வேலைகள் பாா்த்துவந்ததாகக் கூறப்படுகிறது.

புதன்கிழமை இரவு அரவிந்த் வாட்டா் சா்வீஸ் செய்யும் குழாயை எடுத்தபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், மயங்கிவிழுந்த அவரை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து நாகலாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com