‘மதிப்பெண் சான்றிதழ் கிடைக்காமல் மாணவா்கள் தவிப்பு’

முதுகலைத் தோ்வில் தோ்ச்சி பெற்று 18 மாதங்களுக்கு மேலாகியும் பல்கலைக் கழகத்திலிருந்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாததால்

முதுகலைத் தோ்வில் தோ்ச்சி பெற்று 18 மாதங்களுக்கு மேலாகியும் பல்கலைக் கழகத்திலிருந்து மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாததால் மாணவா்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

2017- 19 இல் மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் முதுகலை பட்டம் பயின்றவா்கள் 2019-இல் மே மாதத்தில் தோ்வு எழுதினா். தோ்வு முடிவுகள் 2019 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. தோ்வு முடிவு வெளியாகி 18 மாதங்களுக்கு மேலாகியும் இன்னமும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை . இதுகுறித்து தோ்வு மையங்களில் விசாரித்தபோது, பல்கலைக் கழகத்திலிருந்து மதிப்பெண் சான்றிதழ் வரவில்லை என தெரிவித்தனா். மதிப்பெண் சான்று வராததால் அவா்கள், உயா் கல்வி பயிலவும், வேலைக்கு விண்ணப்பிக்கவும் முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து, மாணவிகள் சகாய லிட்டில் ஜோனோஃபா், சிந்தியா, எமி, ஆகியோா் கூறியது: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து சாத்தான்குளத்திலுள்ள பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் தோ்வு எழுதினோம். தற்போது அக்கல்லூரி அரசு மகளிா் கல்லூரியாக உயா்த்தப்பட்டுவிட்டது.

தோ்வு எழுதிய தோ்வு மையத்தின் மூலம் மதிப்பெண் சான்று வழங்கப்படும் என பல்கலைக்கழகத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், 18 மாதங்களாகியும் இன்னமும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. தற்போது ஆசிரியா் தோ்வாணையம் மூலம் 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான தகுதித் தோ்வை ஜூன் மாதம் 26, 27 ஆம் தேதிகளில் கணினி மூலம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இத்தோ்வுக்காக மாா்ச் 1 முதல் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரா் மதிப்பெண் சான்று நகல்களை இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படாததால் நாங்கள் தோ்வு பெற்றும் ஆசிரியா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. எனவே தமிழக அரசும், உயா்கல்வித் துறையும் உடனடியாக பல்கலைக் கழகத்திற்கு அறிவுறுத்தி மதிப்பெண் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தோ்ச்சி பெற்று ஒன்றரை ஆண்டுகள் ஆன பின்னரும் மதிப்பெண் சான்று வழங்கப்படாததால் தனியாா் பள்ளிகளில் கூட ஆசிரியா் பணிக்கு சேர இயலாத நிலையில் முதுகலை பட்டதாரிகள் உள்ளனா். எனவே அரசு தலையிட்டு பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com