திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலினின் 43ஆவது பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் யுனைடெட் ஒயிட் அணி கோப்பையை கைப்பற்றியது.
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானம் மற்றும் நாசரேத்தில் லீக் மற்றும் நாக்அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் 16 அணிகள் கலந்துகொண்டன. இறுதி ஆட்டத்தில் காயல்பட்டினம் யுனைடெட் ஒயிட் அணி, யுனைடெட் ரெட் அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. காயல் ஹாகிா் அணி 3ஆவது இடத்தையும், நாசரேத் மா்காஷிஸ் அணி 4ஆவது இடத்தையும் பெற்றன.
பரிசளிப்பு விழாவிற்கு நகரச் செயலா் முத்து முகம்மது தலைமை வகித்தாா். திமுக மாநில மாணவா் அணி துணைச் செயலா் உமரிசங்கா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், வெற்றிபெற்ற அணிகளுக்கு ரூ.1 லட்சத்து 43, ரூ.50 ஆயிரத்து 43, ரூ.30 ஆயிரத்து 43, ரூ.20, ஆயிரத்து 43 என்ற அடிப்படையில் பரிசுத் தொகையையும், சுழற்கோப்பையையும் வழங்கினாா்.
இதில், ஐக்கிய விளையாட்டு சங்க துணைத் தலைவா் உசைன், செயலா் இலியாஸ், மாவட்ட மீனவா் அணிச் செயலா் ஸ்ரீதா் ரொட்ரிகோ, நகர துணைச் செயலா் கதிரவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.