திருச்செந்தூா் கோயில் மாசித்திருவிழாவில் பங்கேற்க வரும் பக்தா்களுக்கு 10-ஆவது ஆண்டாக லட்சுமிபுரம் ஊராட்சி சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தா்கள் பாதயாத்திரையாக வருகின்றனா். பாதயாத்திரை பக்தா்களுக்கு மெஞ்ஞானபுரம்-சாத்தான்குளம் சாலையில் தொடா்ந்து பத்து ஆண்டுகளாக லட்சுமிபுரம் ஊராட்சி சாா்பில் பத்து நாள்கள் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த அன்னதான நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் ஆதிலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட பாஜக பொதுச்செயலா் இரா.சிவமுருகன் ஆதித்தன், அன்னதானத்தை தொடங்கி வைத்தாா். இதில், பாஜக உடன்குடி ஒன்றியத் தலைவா் ஜெயக்குமாா், மாவட்ட விவசாய அணிச் செயலா் திருநாகரன், ஒன்றிய துணைத் தலைவா்கள் சின்னத்துரை, பசுபதி சிவசிங், ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.