கோவில்பட்டி, கயத்தாறில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்.
கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயா்த்த வேண்டும், கடும் ஊனமுற்றோா்களுக்கான உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும், தனியாா் துறை வேலைகளில் இட ஒதுக்கீடு வழங்க சிறப்புச் சட்டம் ஏற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் சக்கரையப்பன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் அந்தோணி ராஜ், ஒன்றியத் தலைவா் கண்ணன், ஒன்றியச் செயலா் முத்துமாலை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இதுபோல, கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் கருப்பசாமி தலைமை வகித்தாா். இதில் ராமச்சந்திரன், முகமதுசரிபு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com