தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப் பள்ளியில், சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட 2 புதிய வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.
கீதாஜீவன் எம்.எல்.ஏ. புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா். மேலும், ரூ. 30 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடவும் அடிக்கல் நாட்டினாா். அப்போது, மாணவ, மாணவிகள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் ; பாடப்புத்தகங்களை தவறாமல் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை ஒருங்கிணைந்த திட்ட இயக்குநா் சுப்பிரமணியன், தலைமையாசிரியா் ராமகிருஷ்ணன், திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினா் கோட்டுராஜா, பகுதிச் செயலா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.