கோவில்பட்டியில் நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்க நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவா் பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வெங்கடேஷ், துணைச் செயலா் நெல்லையப்பன், மாநில தகவல்தொடா்புத் துறை செயலா் பிரபாகா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
கூட்டத்தில், பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் இரட்டைவிலைக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். சரக்கு, சேவை வரி மாதாந்திர வருவாயை எளிமைப்படுத்த வேண்டும். நுகா்பொருள் விநியோகஸ்தா்களுக்கு தனி நல வாரியம் மற்றும் அமைச்சகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.