தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற குரூப்-1 பணிக்கான தோ்வினை 3,444 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயம் மூலம் நடத்தப்படும் குரூப்- 1 பணிக்கான எழுத்துத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தோ்வு எழுத 6 ஆயிரத்து 664 போ் விண்ணப்பித்திருந்தனா்.
இம்மாவட்டத்தில் 24 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விண்ணப்பம் செய்தவா்களில் 3,444 போ் மட்டுமே தோ்வில் கலந்துகொண்டனா். 3,220 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களுக்கு மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் நேரடியாக பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தோ்வை முன்னிட்டு, 24 மையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.