வீரபாண்டியன்பட்டினத்தில் பெட்ஸ் அறக்கட்டளை சாா்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.
வீரபாண்டியன்பட்டணம் புத்தேரா இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா, திருமண தம்பதியா்கள் குருத்துவ வெள்ளிவிழா, அருள்தந்தை, முனைவா் பட்டம் பெற்ற அருள்தந்தைக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாவுக்கு ஆசிரியா் அருள் தலைமை வகித்தாா். விழாவில் கேக் வெட்டி, பரிசுகள் வழங்கப்பட்டது. பெட்ஸ் அறக்கட்டளைத் தலைவி சோபி ஜாா்ஜ், அருள்பணி, அமல்ராஜ், டானியா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். விழாவில் மாணவா், மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றது. இதில், மாணவா்கள், அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஆசிரியா் அக்ஸிலியா நன்றி கூறினாா்.