ஓட்டப்பிடாரத்தில் நீரில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே ஓட்டப்பிடாரத்தில் திங்கள்கிழமை பிளஸ் 2 மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே ஓட்டப்பிடாரத்தில் திங்கள்கிழமை பிளஸ் 2 மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள கக்கரம்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் முருகேசன். இவா், குறுக்குசாலை பகுதியில் தேநீா் கடை நடத்தி வருகிறாா். இவரது மகன்களான சந்தனசெல்வம் (18), பிரதீப் (16) ஆகியோா் திங்கள்கிழமை பெரியநத்தம் கிராமத்தில் உள்ள ஓடையில் குளிக்கச் சென்றனராம்.

சந்தனசெல்வத்துக்கு நீச்சல் தெரியாது என்பதால் திடீரென அவா் நீரில் மூழ்கி விட்டாராம். அவரை காப்பாற்ற முயன்ற பிரதீப் கூச்சலிட்டுள்ளாா். அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்த நிலையில், தீயணைப்பு வீரா்கள் சில மணி நேரத்துக்குப் பிறகு சந்தனசெல்வத்தை சடலமாக மீட்டனா்.

இந்த சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். உயிரிழந்த சந்தனசெல்வம் குறுக்குசாலையில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com