சாத்தான்குளம் அருகே கோயிலில் புகுந்து நகை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகே இரட்டைகிணறு கிராமத்தில் உள்ள முப்பிடாதி அம்மன் கோயிலில் பூஜாரி பெருமாள் (50) திங்கள்கிழமை மாலை பூஜை செய்ய சென்றபோது கோயில் கதவு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது அம்மனுக்கு அணிவித்திருந்த 5 கிராம் பொட்டுத்தாலி மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், சாத்தான்குளம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.