திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு 406 கிராம் தங்க வேல் உபயம்
By DIN | Published On : 07th January 2021 06:35 AM | Last Updated : 07th January 2021 06:35 AM | அ+அ அ- |

தங்க வேல்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்தினா் 406 கிராம் எடையுள்ள 2 அடி உயர தங்க வேலை உபயமாக வழங்கினா்.
சென்னை சேத்துப்பட்டைச் சோ்ந்த ‘ஜி ஸ்கொயா் ரியல்டா்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சாா்பில் இந்தத் தங்க வேல் கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) கல்யாணியிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், உதவி ஆணையா் வே. செல்வராஜ், நெல்லை மண்டல நகை சரிபாா்க்கும் அலுவலா் சங்கா், தொழில்நுட்ப உதவியாளா் செல்லப்பாண்டியன், கோயில் உள்துறைக் கண்காணிப்பாளா் மாரிமுத்து, மேலாளா் வள்ளிநாயகம், தக்காா் பிரதிநிதி ஆ.சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.