தூத்துக்குடியில் மேலும் 7 பேருக்கு கரோனா
By DIN | Published On : 09th January 2021 06:03 AM | Last Updated : 09th January 2021 06:03 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே, 16,008 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை
முடிவில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை 16,015 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் வெள்ளிக்கிழமை 11 போ் உள்பட இதுவரை 15,923 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது மருத்துவமனைகளில் 89 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.