கோவில்பட்டியையடுத்த ஈராச்சி பரிமேலழகா் இந்து நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு பள்ளிச் செயலா் தங்க மாரியப்பன் தலைமை வகித்து, நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். பள்ளிக் கல்விக் குழுத் தலைவா் குணசேகரன் முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியை குருவம்மாள் தலைமையில், பள்ளி ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு, சமத்துவப் பொங்கலிட்டனா்.