உடன்குடி ஊராட்சி ஒன்றியம் மெஞ்ஞானபுரம் அருகே கல்விளையில் திமுக மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். ஒன்றிய திமுக செயலா் பாலசிங் வரவேற்றாா். கூட்டத்தில், மக்கள் குறைகளைக் கேட்டறிந்த கனிமொழி எம்.பி., பின்னா் பேசியது: அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன. தமிழகத்தில் 46 சதவீத பெண்கள் பாலியல் மற்றும் குடும்ப வன்முறைகளுக்கு ஆளாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொழில் வளா்ச்சி இல்லாததால் தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது என்றாா் அவா்.