கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயா் சூட்ட வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில் பாலமுருகன் தலைமையில், கோவில்பட்டி கோட்டாட்சியா் விஜயாவிடம் திங்கள்கிழமை அளிக்கப்பட்ட மனு: கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு நேதாஜி பெயா் சூட்ட வேண்டும். கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம், ரயில் நிலையம் அல்லது தீயணைப்பு நிலையம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இடத்தின் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-க்கு சிலை அமைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.