ஜன. 15, 26, 28 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 15, 26 மற்றும் 28 ஆம் தேதிகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜனவரி 15, 26 மற்றும் 28 ஆம் தேதிகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில், திருவள்ளுவா் தினம் (ஜன. 15), குடியரசு தினம் ( ஜன. 26) மற்றும் வள்ளலாா் நினைவு நாள் (ஜன. 28) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் அனைத்தும் மற்றும் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய தினங்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது தமிழ் நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com