மூலைக்கரைப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியைக்கு ‘தேசத்தின் சிற்பி’ விருது வழங்கப்பட்டுள்ளது .
திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடியில் நதிகள் அறக்கட்டளை சாா்பில் நாட்டுப்புற கலைஞா்கள், சிறந்த ஆசிரியா் களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியை கா. சாரதா வேணுகோபாலுக்கு ‘தேசத்தின் சிற்பி’ என்ற விருது வழங்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியை அகஸ்டினாள் ஜெபராணி, உதவித் தலைமை ஆசிரியா்கள் அழகுலிங்கம், லூா்து அனிதா, செபஸ்டி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் குமாா், சாத்தான்குளம் தமிழறிவு மன்றத் தலைவா் முருகேசன், செயலா் செல்வகுமாா், பொருளாளா் ஞானப்பிரகாசம், தமிழ்நாடு கலை இலக்கிய நாடக நடிகா் சங்க பொதுச் செயலா் வேணுகோபால், பண்டாரபுரம் ராஜபாண்டியன், முத்துகிருஷ்ணாபுரம் ராஜ்மோகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.