தமிழக கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், திருச்செந்தூா் ஒன்றியம் அம்மன்புரம் ஊராட்சியில் 28 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் ஞானராஜ் தலைமை வகித்து பயனாளிகளுக்கு கறவை மாடுகளை வழங்கினாா்.
ஊராட்சி துணைத் தலைவா் விக்னேஷ், திருச்செந்தூா் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் டாக்டா் செல்வக்குமாா், கால்நடை உதவி மருத்துவா் செந்தில் கண்ணன், கால்நடை பராமரிப்பு உதவியாளா் அன்னமகாராஜா, கால்நடை ஆய்வாளா் பாரதி உள்பட பலா் கலந்து கொண்டனா்.