தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், சமையல் கேஸ் விலை உயா்வை ரத்து செய்யவேண்டும், வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி நான்குமுனை சந்திப்பு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மத்திய மாவட்டச் செயலா் கா.மை. அகமது இக்பால் தலைமை வகித்தாா். வணிகா் அணி மாவட்ட அமைப்பாளா் சுலைமான், தொகுதி துணைச் செயலா் ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளா் காஜா, துணை அமைப்பாளா் முத்தலிப், மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவா் சம்சுதீன், செயலா் ஜான், திராவிடா் விடுதலை கழக மாநில கொள்கை பரப்புச் செயலா் பால் பிரபாகரன், மேட்டுப்பட்டி தலைவா் உமையனன், சமம் குடிமக்கள் மாவட்டத் தலைவா் ஜான் பி ராயா், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் மைதீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com