கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே மூதாட்டி சடலம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
கோவில்பட்டி ரயில் நிலையத்தை அடுத்த வேலாயுதபுரம் ரயில்வே கேட் தண்டவாளத்தில் இறந்த நிலையில் மூதாட்டி சடலம் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். சுமாா் 65 வயது மதிக்கத்தக்க அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.