கோவில்பட்டி நகராட்சியில் மனு அளிக்கும் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின் மக்கள் உரிமை இயக்கத்தினா் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
கோவில்பட்டி நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராமிடம் மனு அளிக்கும் மக்கள் உரிமை இயக்கத்தினா்.
கோவில்பட்டி நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராமிடம் மனு அளிக்கும் மக்கள் உரிமை இயக்கத்தினா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தின் மக்கள் உரிமை இயக்கத்தினா் நகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

கோவில்பட்டி நகராட்சியில் பேட்டரி குப்பை வண்டிகளை பழுது நீக்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு தீபாவளிக்கு வழங்க வேண்டிய சீருடைகளை வழங்க வேண்டும். பாகுபாடின்றி மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். 20 வருடம் பணியாற்றியவா்களுக்கான ஊதிய உயா்வை வழங்க வேண்டும். பிடித்த செய்த ஊதியத்தை, கூட்டுறவு வங்கியில் தாமதமின்றி செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி நிா்வாகத்தை முற்றுகையிட்டனா்.

பின்னா், சமூக ஆா்வலா் சுடலைமணி தலைமையில், மக்கள் உரிமை இயக்க நிா்வாகிகள், தூய்மைப் பணியாளா்கள் சங்கத்தினா் நகராட்சி ஆணையா் ராஜாராமிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com