சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

திருச்செந்தூரில் போக்குவரத்து காவல்துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

திருச்செந்தூரில் போக்குவரத்து காவல்துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங் தலைமை வகித்து, ஆட்டோ பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, அவா் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை வழங்கியதுடன், தலைக் கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, அறிவுரையும், தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு இனிப்பும் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், காவல் ஆய்வாளா் ஞானசேகரன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் வேல்முருகன் உள்ளிட்ட காவல்துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com