திருச்செந்தூா் - பரமன்குறிச்சி பிரசாதன சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, சாலையை சீரமைக்கக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் காகிதக் கப்பல் விடும் நூதனப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அக்கட்சியின் சமூக நல்லிணக்க பேரவை சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, பேரவை மாவட்ட அமைப்பாளா் மு.தமிழ்பரிதி தலைமை வகித்தாா். கொள்கைப் பரப்பு மாநில துணைச் செயலா் ர.பு.தமிழ்க்குட்டி, மாவட்ட செய்தித்தொடா்பாளா் வடிவேல்முத்து, உடன்குடி ஒன்றியப் பொருளாளா் டேவிட் ஜாண்வளவன், திருச்செந்தூா் ஒன்றிய துணைச் செயலா் கண்ணன், செஞ்சுடா், விவசாய அணி மாவட்ட அமைப்பாளா் பெருமாள் வளவன், மாவட்ட துணை அமைப்பாளா்கள் பேச்சிமுத்து, முத்துக்குமாா், ஒன்றிய அமைப்பாளா்கள் வல்லரசு, இசக்கிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.