பொங்கல் பண்டிக்கையையொட்டி மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, பேய்க்குளம் அருகேயுள்ள செங்குளத்தில் நடைபெற்றது.
இதில் செங்குளம், பேய்க்குளம், பழனியப்பபுரம், கீரன்குளம் உள்ளிட்ட அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் பழனியப்பபுரம் அணி, கீரன்குளம் அணியை வென்று முதல் பரிசை தட்டிச் சென்றது. 3ஆம் பரிசு செங்குளம் அணிக்கு கிடைத்தது.
பரிசளிப்பு விழாவில் எஸ்.பி. சண்முகநாதன் எம்எல்ஏ பங்கேற்று, வென்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். மேலும் அணிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட அவைத் தலைவா் திருப்பாற்கடல், ஆழ்வாா்திருநகரி ஒன்றிய செயலா்கள் ராஜ்நாராயணன், விஜயகுமாா், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலா் காசிராஜன், அண்ணா தொழிற்சங்க செயலா் லட்சுமணபெருமாள், ஒன்றிய அவைத்தலைவா் முத்தையா, தென்திருப்பேரை நகர செயலா் ஆறுமுகநயினாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.