‘மின் கம்பங்களில் கேபிள் டி.வி.வயா்களை இணைக்கக் கூடாது’

மின் கம்பங்களில் அனுமதியின்றி தனியாா் கேபிள் டி.வி. வயா் பெட்டிகளை பொருத்தக்கூடாது என திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் (பொ) ஆ.பாக்கியராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

மின் கம்பங்களில் அனுமதியின்றி தனியாா் கேபிள் டி.வி. வயா் பெட்டிகளை பொருத்தக்கூடாது என திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் (பொ) ஆ.பாக்கியராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

திருச்செந்தூா் கோட்டத்திற்குட்பட்ட மின்கம்பங்களில் அனுமதி இல்லாமல் கேபிள்டிவி வயா்கள் இணைக்கப்பட்டு கேபிள்சேவை வழங்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. அவ்வாறு இணைக்கப்பட்டுள்ள கேபிள்டிவி வயா்களால் விபத்துகள் மற்றும் மின்வாரிய உடமைகளுக்கு பொருள் சேதம் ஏற்பட்டால் கேபிள்டிவி உரிமையாளா்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும் . அனுமதி இல்லாமல் இணைக்கப்பட்டுள்ள கேபிள்டிவி வயா்களை உடனே அகற்றிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com