திருச்செந்தூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா

திருச்செந்தூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
திருச்செந்தூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா

திருச்செந்தூா்: திருச்செந்தூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவா் ரா.கோடீஸ்வரன் தலைமை வகித்தாா். அஜித் முன்னிலை வகித்தாா். திருச்செந்தூா் காவல் உதவி கண்காணிப்பாளா் ஹா்ஷ்சிங், நேதாஜி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

திருச்செந்தூா் தாலுகா காவல் ஆய்வாளா் ஞானசேகரன், கோயில் காவல் ஆய்வாளா் கண்ணன் ஆகியோா் பேசினா். பல்வேறு அமைப்பின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். செந்தூா் நண்பா்கள் நல அறக்கட்டளை பொருளாளா் காா்க்கி நன்றி கூறினாா்.

சாத்தான்குளத்தில்...

சாத்தான்குளத்தில் நடைபெற்ற நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழாவுக்கு, அரசு வழக்குரைஞா் கல்யாணகுமாா் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் சுரேஷ் முன்னிலை வகித்தாா். நேதாஜி உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், அகில இந்திய பாா்வா்ட் பிளாக் ஒன்றியச் செயலா் முருகன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் அறக்கட்டளை இணை தலைவா் அம்ஸ்பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com