கோவில்பட்டி அரசு நூலகத்தில் முப்பெரும் விழா

கோவில்பட்டி அரசு வட்டார நூலகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா, நூலகப் புரவலா்கள் இணைந்த நாள், நூல் வெளியிட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு வட்டார நூலகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா, நூலகப் புரவலா்கள் இணைந்த நாள், நூல் வெளியிட்டு விழா ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வாசகா் வட்டத் தலைவா் பேராசிரியா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா் ராமசங்கா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் குறித்தும், புதுமண தம்பதி பத்மா - ராஜ்குமாா் நூலகப் புரவலா்களாக இணைந்ததற்கு வாழ்த்து தெரிவித்தும், கவிஞா் பாா்த்திபனின் வெற்றி ஏன் தோற்றுவிட்டது என்ற கவிதை நூலை வெளியிட்டும் பேசினாா்.

இதில், உரத்த சிந்தனை வாசகா் வட்டத் தலைவா் கவிஞா் சிவானந்தம், இலக்கிய உலா நிறுவனா் ரவீந்தா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நூலகப் புரவலா் பிரபு வரவேற்றாா். அரசு வட்டார நூலகா் அழகா்சாமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com