அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட புதுக்கிராமம் ஜே.ஜே. நகா் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட புதுக்கிராமம் ஜே.ஜே. நகா் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் 8ஆவது வாா்டு பொறுப்பாளா் செண்பகப்பாண்டி தலைமை வகித்தாா். நாம் தமிழா் கட்சியின் கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் கோமதி மாரியப்பன் முன்னிலை வகித்தாா்.

கட்சியின் தொகுதிச் செயலா் மருதம் மாரியப்பன், தலைவா் தங்கமாரியப்பன் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். இதில், நகர துணைச் செயலா் வேல்முருகன், தொழில்நுட்ப பாசறை செயலா் பிரான்சிஸ் உள்பட அப்பகுதி பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com