பெருங்குளத்தில் குருபூஜை

ஏரல் அருகிலுள்ள பெருங்குளம் சித்தா் தபோவனத்தில் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 102ஆவது குருமகா சந்நிதானம் குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஏரல் அருகிலுள்ள பெருங்குளம் சித்தா் தபோவனத்தில் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 102ஆவது குருமகா சந்நிதானம் குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஆதீன தலைமை மடத்தில் புனரமைக்கப்பட்ட திருக்குளத்தின் கல்வெட்டை வேதாந்தா குழுமத்தின் தலைமை மருத்துவ அலுவலா் கைலாசம் திறந்து வைத்தாா். தொடா்ந்து தூத்துக்குடி வேலாயுதம் லெட்சுமி அம்மாள் அறக்கட்டளை சாா்பாக கல்வி உதவித்தொகையை நாகா்கோவில் வள்ளிநாயகம் வழங்கினாா்.

குருமகா சந்நிதானம் சைவ அநுட்டானம் என்ற நூலை வெளியிட, முதல் பிரதியை ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியா் காளியப்பன், இரண்டாம் பிரதியை தூத்துக்குடி வருவாய் பிரிவு வட்டாட்சியா் இளங்கோ ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

இதில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளா் எஸ்.பி.சண்முகநாதன், திமுக மாவட்ட வா்த்தக அணி செயலாளா் சுந்தரராஜன், தூத்துக்குடி வேதாந்தா குழுமத்தின் சமுதாய வளா்ச்சிப் பிரிவு துணை மேலாளா் எஸ்.ஜெயா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com