உடன்குடி வில்லிகுடியிருப்பு மனவளக் கலை மன்றத்தில் ஒரு நாள் சிறப்பு தத்துவ விளக்க முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மன்றத் தலைவா் பி.கோதண்டராமன் தலைமை வகித்தாா். அறக்கட்டளைத் தலைவா் மனோகரன், பொருளாளா் பரமசிவன், செயலா் அருணாசலம், ராஜமாா்த்தாண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முகாமில், திருச்சி பேராசிரியா் அமுதா ராமானுஜம் பங்கேற்று உடல் நலம், நீண்ட ஆயுள், மன நிறைவுக்கான வழி, நல் இல்லறம், ஞானம், கரோனாவை மன்ற உறுப்பினா்கள் எளிதாக கையாண்ட விதம் ஆகியவை குறித்து பேசினாா். இதில் காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.சிவசுப்பிரமணியன், நட்டாா் மற்றும் திரளான மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
ஆசிரியை சி.பா்வதாதேவி நன்றி கூறினாா்.