திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் குளித்தபோது, பக்தா் தவற விட்ட 5 பவுன் தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது.
மதுரை, ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன்(45). இவா் குடும்பத்துடன் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்தாா். அங்கு, அவா்கள் கடலில் குளித்த போது கண்ணனின் 5 பவுன் தங்கச்சங்கிலி கடலில் தவறி விழுந்துவிட்டது. இதுகுறித்து தற்காலிக கடலோர பாதுகாப்புக் குழு இளைஞா்களிடம் தெரிவிக்கப்பட்டது. கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்ட ஜாண், மணி, பிரபு தலைமையிலான 20 போ் கடலில் சுமாா் 2 மணி நேரம் தேடி 5 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு கண்ணனிடம் ஒப்படைந்தனா். இளைஞா்கள் குழுவுக்கு அவரது குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.