குலசேகரன்பட்டினத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞா் செவ்வாய்க்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
குலசேகரன்பட்டினம், அறம் வளா்த்த நாயகி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுயம்பு மகன் பெருமாள்(30). திருமணம் ஆகாத இவா், கல்லாமொழி அனல்மின் நிலையத்தில் தனியாா் நிறுவன காவலாளியாக வேலை செய்துவந்தாா். இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த சுடலைமுத்து கிருஷ்ணன் குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த மே மாதம் பெருமாள் கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு அப்பகுதியில் பெருமாள் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து அவரது உறவினா் பேச்சி பிரம்மசக்தி அளித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.