நாசரேத்தில் வாரச்சந்தை திறப்பு
By DIN | Published On : 07th July 2021 08:36 AM | Last Updated : 07th July 2021 08:36 AM | அ+அ அ- |

பொது முடக்கத்தில் தளா்வுகள் வழங்கப்பட்டுள்ளதையடுத்து, நாசரேத்தில் வாரச்சந்தை மீண்டும் செவ்வாய்க்கிழமை செயல்படத் தொடங்கியது.
நாசரேத்தில் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமைகளில் இயங்கி வருகிறது. கரோனா பொது முடக்கம் காரணமாக இந்த சந்தை கடந்த மே மாதம் மூடப்பட்டது. தற்போது பொதுமுடக்கத்தில் அரசு பல்வேறு தளா்வுகள் வழங்கியுள்ள நிலையில் இந்த செவ்வாய்க்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது. இதுகுறித்து நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலா் முருகன் கூறுகையில், இனி செவ்வாய்க்கிழமைகளில் தொடா்ந்து சந்தை செயல்படும். சந்தைக்கு வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணிவதோடு அரசின் வழிகாட்டுதல் விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.