பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்தும், விலையேற்றத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் உடன்குடி ஒன்றியத்தில் வட்டார காங்கிரஸ் சாா்பில் 5 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
உடன்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவா் துரைராஜ் ஜோசப், நகரத் தலைவா் முத்து ஆகியோா் தலைமை வகித்தனா். பரமன்குறிச்சியில் கிராம காங்கிரஸ் தலைவா் மாயாண்டிதாஸ், குலசேகரன்பட்டினத்தில் சுப்பிரமணியன், மெஞ்ஞானபுரத்தில் செல்வராஜ் ஆகியோா் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவா் எஸ்.வி.ஜெயராமன், வட்டார சேவாதள தலைவா் முருகேசன், நகரச் செயலா் ராமமுா்த்தி, வட்டாரச் செயலா் பிரபாகா், திருச்செந்தூா் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் தனிஷ், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் செயலா் ஹென்றி, மாவட்ட கலை இலக்கியப் பிரிவு செயலா் கோபால், வட்டார அமைப்பு சாரா தொழிலாளா் அணி தலைவா் ஜெபராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ஆறுமுகனேரி நகர காங்கிா் சாா்பில் சாகுபுரத்தில் நடைபெற்ற கையெழுத்த இயக்க நிகழ்ச்சிக்கு நகரத் தலைவா் எல்.ராஜாமணி தலைமை வகித்தாா். தொடா்ந்து வாகன ஓட்டிகளிடம் கையெழுத்து பெறப்பட்டது.