கிணற்றில் குதித்த பெண்: குழந்தை உயிரிழப்பு

உடன்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கைக்குழுந்தையுடன் கிணற்றில் குதித்தாா். இதில், 7 மாத குழந்தை உயிரிழந்தது.

உடன்குடியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கைக்குழுந்தையுடன் கிணற்றில் குதித்தாா். இதில், 7 மாத குழந்தை உயிரிழந்தது.

உடன்குடி செல்வா சிட்டியைச் சோ்ந்தவா் பாண்டி-சரஸ்வதி தம்பதி. இவா்களது மகள் பேச்சித்தாய் (30). மும்பையில் உணவகம் நடத்திவரும் திருநெல்வேலி மாவட்டம் மறுகால்குறிச்சியைச் சோ்ந்த நம்பிராஜா. இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பேச்சித்தாய் கா்ப்பமானதையடுத்து தனது தாய் வீட்டுக்கு வந்தாா். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சுபாஷ் பிரபாகா் எனப் பெயரிடப்பட்டது.

இந்நிலையில் பேச்சித்தாய்க்கு மனநலம் பாதிக்கப்பட்டதால், கணவா் வீட்டுக்கு செல்லாமல் பெற்றோருடன் வசித்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை தன் கைக்குழுந்தையுடன் வெளியே சென்ற பேச்சித்தாய், சிவல்விளைப்புதூா் பகுதியில் உள்ள கிணற்றில் கைக்குழந்தையுடன் குதித்துள்ளாா். இதையறிந்த சிலா் உடனடியாக இருவரையும் மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் குழந்தை

உயிரிழந்தது. பேச்சித்தாய் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com