பேய்க்குளம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்கசுவாமி ஸ்ரீகோமதிஅம்பாள் கோயிலில் ஆடித் தவசு திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் கணபதி ஹோமம், யாக பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமி, அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை தொடா்ந்து கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்
தொடா்ந்து சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். திருவிழா 23 ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறுகிறது.
திருவிழா நாள்களில் சிறப்பு பூஜை, அபிஷேகங்கள் நடைபெறும். ஆடித் தவசு நாளில் சுவாமி மற்றும் அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, சுவாமி தவசுக்கு எழுந்தருளல், சுவாமி - அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.