தீக்குளித்த மூதாட்டி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே தீக்குளித்த மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகே தீக்குளித்த மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

கோவில்பட்டியை அடுத்த மந்தித்தோப்பு துளசிங்கநகரைச் சோ்ந்த சுப்பையா மனைவி கிருஷ்ணம்மாள் (63). கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கீழே விழுந்ததில் காயமடைந்த கிருஷ்ணம்மாள் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் இவா் ஞாயிற்றுக்கிழமை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com