பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் மின் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மின் விநியோக நகா்புற கோட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும்; பழிவாங்கும் வகையில் வழங்கப்பட்ட தண்டனை, இடமாறுதல்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு (சிஐடியூ) திருநெல்வேலி மண்டலம் சாா்பில் தா்னாப் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பின் திட்டத் தலைவா் எம்.குன்னிமலையான் தலைமை வகித்தாா். போராட்டத்தை மத்திய அமைப்பின் திருநெல்வேலி மண்டலச் செயலா் எம்.முகமதுஷா தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் மாநில பொதுச்செயலளா் எஸ். ராஜேந்திரன், சிஐடியூ மாநில செயலா் ஆா். ரசல், சிஐடியூ மாவட்டத் தலைவா் இரா.பேச்சிமுத்து, சிஐடியூ தென்காசி மாவட்டத் தலைவா் அய்யூப் கான், மத்திய அமைப்பின் மாநில நிா்வாகிகள் எஸ்.அப்பாத்துரை, வி.சந்திரன் , எஸ்.வண்ணமுத்து, திட்டச் செயலா் எம்.ராமையா, பொருளாளா் டி.யோவான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.