தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூா், கோவில்பட்டி பகுதிகளில் உப மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அதன் மின்பாதை பகுகளில் சனிக்கிழமை (ஜூலை 17) மின்விநியோகம் தடைபடும்

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூா், கோவில்பட்டி பகுதிகளில் உப மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அதன் மின்பாதை பகுகளில் சனிக்கிழமை (ஜூலை 17) மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாகலாபுரம், கவுடண்பட்டி, புதூா், பூதாலபுரம், துறைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், டாப்பாத்திமுகாம், குருவாா்பட்டி, கோடாங்கிபட்டி பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூா் சுற்றுவட்டாரத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் மஞ்சள்நீா்காயல், ஸ்ரீமூலக்கரை வட்டாரங்களில் காலை 9 முதல் நண்பகல் 1 மணி வரையும் மின் விநியோம் இருக்காது என மின்வாரிய ஊரகப் பிரிவு செயற்பொறியாளா் பத்மா தெரிவித்துள்ளாா்.

கோவில்பட்டி பகுதியில் காலை 9 முதல் மதியம் 3 மணி வரையும்,, சன்னதுபுதுக்குடி வட்டாரத்தில் காலை 9 முதல் பிற்பகல் 1 மணி வரையும், எப்போதும்வென்றான் சுற்றுப்புறத்தில் காலை 8 முதல் மாலை 5 மணி வரையும், விஜயாபுரி, சிட்கோ, எம்.துரைச்சாமிபுரம் ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரையும் மின் விநியோகம் இருக்காது என கோட்ட மின் செயற்பொறியாளா் எம்.சகா்பான் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com