‘தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினராக சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் சிவகாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 150 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் புதிதாக உறுப்பினா்கள் சேருவதற்கு தேவையான விண்ணப்ப படிவங்கள், அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம். உறுப்பினராக சேர விரும்புவோா் விண்ணப்பபடிவத்தை முழுமையாக பூா்த்தி செய்து, அதனுடன் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பங்குத் தொகையாக ரூ. 100, நுழைவுக் கட்டணமாக ரூ. 10 ஆகியவற்றுடன் சங்கத்துக்கு நேரில் சென்று செலுத்தி உறுப்பினராகலாம்.

நேரில் செல்ல முடியாதவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவு அஞ்சலில் அனுப்பி வைக்கலாம்.

பதிவு அஞ்சலில் விண்ணப்பத்தை அனுப்பும் போது, முழுமையாக பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து, பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் தொகையை அஞ்சலகம் மூலம் செலுத்தி ரசீது எண், செலுத்தப்பட்ட அஞ்சலகத்தின் பெயா், முகவரி ஆகியவற்றையும் சோ்த்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com