வீட்டு பீரோவை உடைத்து 23 பவுன் நகை, பணம் திருட்டு

மெஞ்ஞானபுரம் அருகே வீட்டு பீரோவை உடைத்து 23 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மெஞ்ஞானபுரம் அருகே வீட்டு பீரோவை உடைத்து 23 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள அச்சம்பாடு தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி (36). கூலித் தொழிலாளா்களான இருவரும், வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்று விட்டனராம்.

ராஜேஷ்வரி வீட்டைப் பூட்டி சாவியை வழக்கம்போல் கிரைண்டரில் மறைத்து வைத்துச் சென்றாராம். பிற்பகலில் வேலை முடிந்து வந்து பாா்த்தபோது கிரைண்டரில் சாவி இல்லையாம்.

வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு, பீரோவை உடைத்து, அதில் இருந்த 23 பவுன் நகைகள், ரூ. 42 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com