தூத்துக்குடியில் மீன் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ஈரமாவு, ரொட்டித்தூள் பயன்படுத்தி மீன் பொருள்கள் தயாரிப்பது குறித்து தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி முகாம் 3 நாள்கள் நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன் பொருள்கள் தயாரிப்பு பயிற்சியில் பங்கேற்றோா்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன் பொருள்கள் தயாரிப்பு பயிற்சியில் பங்கேற்றோா்.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், ஈரமாவு, ரொட்டித்தூள் பயன்படுத்தி மீன் பொருள்கள் தயாரிப்பது குறித்து தொழில்நுட்ப செயல் விளக்கப் பயிற்சி முகாம் 3 நாள்கள் நடைபெற்றது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்திய மீன்வளத் தொழில்நுட்ப நிலையத்தின் பட்டியல் இன சமூகம் மற்றும் பகுதி திட்டம் நிதியுதவியுடன் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், பட்டியலினப் பெண்கள் பலா் பங்கேற்றனா்.

முகாமை மீன்வளக் கல்லூரி பொறுப்பு முதல்வா் சுஜாத்குமாா் தொடக்கிவைத்தாா். பயிற்சியின்போது, மீன் குச்சி, மீன் பா்கா், மீன் கட்லெட், மீன் கோலா உருண்டைகள் செய்வது குறித்த செயல் விளக்கமும், மீன் ஊறுகாய் தயாரிப்பு குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது.

நிறைவு விழாவில், மாவட்ட தொழில்மையப் பொதுமேலாளா் சொா்ணலதா கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கினாா். மீன்வள விரிவாக்கத் தலைவா் சாந்தகுமாா், உதவிப் பேராசிரியா் கோ. அருள்ஒளி, மீன்பதனத் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியா் கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com